:::: MENU ::::
  • SIGARAM SPEECH COMPETITION

  • SIGARAM FOUNDATION

  • EDUCATION

  • EDUCATION

  • EMPOWER

  • LET'S MAKE A DIFFERENCE

Showing posts with label Sankara Eye Hospital. Show all posts
Showing posts with label Sankara Eye Hospital. Show all posts

பாப்பம்பட்டியில் ஜூலை 19 அன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்



கோவை, ஜூலை 2026:

பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் சிகரம் பவுண்டேஷன், சங்கரா கண் மருத்துவமனை, மகிழ் அகாடமி, பாப்பம்பட்டி ஊராட்சி மற்றும் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்துகின்றன.

இம்முகாம் 2026 ஜூலை 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும், கண்புரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் (IOL), உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண் நீர் அழுத்த நோய் (Glaucoma) பரிசோதனை சிறப்பு முறையில் மேற்கொள்ளப்படும். மாறுகண், பிறவிக்கண் குறைபாடு, மாலைக்கண் நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசோதனை செய்யப்படும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான கண் கண்ணாடிகள் முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள், அருகிலுள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் மற்றும் பயன்படுத்தும் மருந்துகளுடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாமில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று இலவச மருத்துவ சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:

📞 90035 95595, 98945 44778

"அனைவரும் வருக... பயன்பெறுக

இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


கண் சிகிச்சை முகாம்

சிகரம் பவுண்டேசன் தலைவர் சிகரம் விஸ்வபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, SNMV கலை அறிவியல் கல்லூரி, குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 01-10-2023 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை,  பாப்பம்பட்டி நூலகம் வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

 

இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 

மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.

அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.



உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமுக்கு வர வேண்டும்.

 

முகாம் தொடர்புக்கு : 9894544778, 90035 95595